டுபாய் நோக்கி எடுத்து செல்ல முற்பட்ட ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, December 2, 2018

டுபாய் நோக்கி எடுத்து செல்ல முற்பட்ட ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இருவர் கைது

சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை வல்லப்பட்டையினை டுபாய் நோக்கி எடுத்து செல்ல முற்பட்ட இருவர் இன்று (02) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்த 40 மற்றும் 34 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று (06) மதியம் 12.55 மணிக்கு டுபாய் நோக்கி பயணிக்க இருந்த UL 231 என்ற விமானத்தின் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்காகவே சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

சந்தேக நபரிடம் இருந்து 4,008,250 ரூபா பெறுமதியான 79 கிலோ 250 கிராம் எடையுடைய வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment