நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமைக்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல வழியை காட்டும் – சீ.பி.ரத்நாயக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, December 2, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமைக்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல வழியை காட்டும் – சீ.பி.ரத்நாயக்க

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமைக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நல்ல வழியை காட்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சீ.பி.ரத்நாயக்க, நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளையில் நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பால் சிறந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்க தேர்தல் ஒன்றின் ஊடாக மக்கள் சரியான தீர்ப்பினை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொத்மலை தவலந்தென்ன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பணை செய்வதிலிருந்து தடுத்து நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸ, மீண்டும் இந்த நாட்டை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க இடமளிக்கமாட்டார் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சீ.பி.ரத்நாயக்க, சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள் செய்யப்பட்டன.

நமது நாட்டு மக்களுக்கே சொந்தமான துறைமுகம், விமான நிலையம், அதிவேக வீதிகள், எண்ணெய் தாங்கிகள் என அபிவிருத்தி செய்யப்பட்ட வளங்களை வெளிநாடுகளுக்கு தாரைவார்த்து கொடுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து இந்த வளங்களையும் நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கவே ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஸவிற்கு பிரதமர் பதவியை சட்டபூர்வமாக வழக்கியதாக சுட்டிக்காட்டினார்.

இதனை எதிர்த்தும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமையை எதிர்த்தும் பலர் உயர் நீதிமன்றம் சென்றனர். இதற்கு காரணம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாடுபற்றிய கவலையில்லை மாறாக பதவியே தேவை என்பதுதான். இதற்கு துணையாக பலரும் நீதிமன்றம் செல்கின்றனர்.

எனினும் உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி வரை தற்காலிக தடை விதித்துள்ள நீதிமன்றம் அதன் தீர்ப்பை நாட்டின் எதிர்காலத்தை கருதி நல்ல தீர்பை வழங்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

ஆனால் நீதிமன்ற தீர்ப்பு புதிய அரசுக்கு சாதகமான அமையும் பட்சத்தில் கடந்த 14ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தை கூட்டி 15ஆம் திகதி முதல் முறையற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரை மேற்கொண்டமைக்கு சபாநாயகர் கருணாரத்ன ஜெயசூரிய நாடாளுமன்றத்தின் செலவீனங்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பால் பொதுத் தேர்தல் ஒன்றின் ஊடாக நல்ல தீர்ப்பினை வழங்க வேண்டும் ஆகையினால் தேர்தல் ஒன்றை வலியுறுத்தும் நிலையில் தேர்தலுக்கு முகம் கொடுத்தால் தோல்வியை தழுவிக்கொள்ள நேரிடும் என சிலர் பலவந்தமாகவும் நாட்டில் அராஜக அரசியல் சூழ்நிலையை உருவாக்கியும் ஆட்சியை கைப்பற்றுவதில் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி செயற்படுவதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சீ.பி.ரத்நாயக்க,குற்றம் சுமத்தினார்.

No comments:

Post a Comment