பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 19, 2018

பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

பொதுபல சேன அமைப்பினர் இன்று (19) மகஜர் ஒன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளார். 

அறிக்கை ஒன்றின் ஊடாகவே ஜனாதிபதி தனது கவலையை தெரிவித்துள்ளார். 

தேரர்கள் இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க வருகை தருவதாக அறிவித்திருக்கவில்லை என்பதுடன், தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து சுமூகமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி அத்தேரர்களினால் கலபொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் முன்வைத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment