புலிகள் முஸ்லீம்களை விரட்டியதை வக்காளத்து வாங்கும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 2, 2018

புலிகள் முஸ்லீம்களை விரட்டியதை வக்காளத்து வாங்கும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்

முஸ்லிம்கள் விசுவாசத்திற்கு மாறாக, அன்றைய காலத்தில் காணப்பட்டதனால் விடுதலைப்புலிகள் அவர்களை வெளியேற்றியதாக மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்.

கடந்த (31) நடைபெற்று முடிந்த 130 ஆவது மாகாண சபை அமர்வில் குறித்த மாகாண சபை உறுப்பினர் தெரிவித்துள்ளதாவது, மக்களாட்சி தத்துவத்துக்கு மாறாக இருந்தால் விடுதலைப்புலிகள் போன்று நாம் செயற்பட வேண்டும். மக்களுக்கு விசுவாசமாக நடக்காத சந்தர்ப்பத்தில் முக்கிய முடிவுகளை நாம் எடுக்க வேண்டும்.

அவ்வாறே தான் கடந்த காலங்களில் புலிகளும் மாத்தையா, கருணா போன்றோருக்கெதிராக மேற்கொண்டனர்.

இதே போன்று தான் அன்றைய காலத்திலும் புலிகளின் தலைமையினால் வட பகுதி முஸ்லீம்கள் ஒரு சிலரினால் இவ்வாறான வெளியேற்ற முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும். இது சரியாக இருப்பதாகவே தற்போது தோன்றியுள்ளது.

மேற்படி செய்தியை யாழில் வெளியாகும் பிரதான பத்திரிகை தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு என்கின்ற ஒரு பாரிய மனித உரிமை மீறலை முஸ்லிம் பிரதிநிதியாகிய இவர் அவ்விடயம் குற்றமற்றதாகக் காட்டுவதற்கு முயன்றுள்ளார். அத்தோடு, முஸ்லிம் மக்களால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு கருத்தை இவர் அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்றார் என யாழ் முஸ்லீம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவரது அரசியல் போக்கு தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்தும் எனக்கூறி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி வருகின்றார் எனவும் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த மாகாண சபை உறுப்பினரும் மௌனமாகவே இருந்து வருகின்றார். அத்துடன், இம்மாதம் இறுதிப்பகுதியில் மாகாண சபையின் ஆட்சிக்காலமும் நிறைவுக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது.

thehotline.lk

No comments:

Post a Comment