கந்தானையில் துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, September 30, 2018

கந்தானையில் துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி

கந்தானை, வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று (30) நண்பகல் அளவில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் 40 வயதான ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

கார் ஒன்றில் வந்த குறித்த பெண் மீது அடையாளம் தெரியாத சிலரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கந்தானை, வெலிகம்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டை அடுத்து, பாரிய காயங்களுக்குள்ளான குறித்த பெண், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டோர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப் பெறாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment