திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான நீர்வழங்கல் குழாயில் இடம்பெறவிருக்கும் திருத்தம் காரணமாக இவ்வாறு நீர் வழங்கல் தடைபடுமென திருகோணமலை நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் திருகோணமலை அலுவலக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
தம்பலகமம் பிரதேசத்தல் இத்திருத்தம் இடம்பெறவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில் கிண்ணியா, திருகோணமலை நகரம் மற்றும் பட்டினமும் சூழலும், பாலையுற்று, தம்பலகமம், ஆண்டாங்குளம், சாம்பல்தீவு முதல் இரக்கண்டி வரை 7 ஆம் திகதி காலை 6.00 மணிமுதல் 8 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை நீர் வழங்கல் தடைபடும் என அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment