வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ETI நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ETI நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

பண வைப்புச் செய்தவர்களின் பணத்தை திரும்ப வழங்குவது சம்பந்தமான யோசனைகள் அடங்கிய திட்ட வரைவு ஒன்று இலங்கை மத்திய வங்கியிடம் சமர்பிக்கப்பட்டிருப்பதாக ETI நிறுவனம் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமது நிறுவனத்தை மீள்கட்டமைக்க அனுமதி வழங்குமாறு கோரி ஈடிஐ நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று (31) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதனைக் கூறியுள்ளார். 

அதன் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் பதில் கிடைக்கும் வரை அந்த வழக்கை ஒத்தி வைக்குமாறு நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார். 

அதன்படி குறித்த வழக்கை நவம்பர் மாதம் 01ம் திகதி வரை ஒத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி ருவன் பெர்ணான்டோ, எதிர்ப்புக்கள் இருந்தால் அன்றைய தினம் முன்வைக்குமாறு இலங்கை மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளார். 

இதேவேளை இந்த வழக்கில் இணைந்து தமது தரப்பு கருத்துக்களை தெரிவிக்க அனுமதி வழங்குமாறு ஈடிஐ வைப்பாளர்களின் சட்டத்தரணிகள் அனுமதி கேட்டிருந்த நிலையில் அது தொடர்பில் அடுத்த விசாரணையின் போது விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment