முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை மன்னிப்போம் ஆனால் மறக்க மாட்டோம் : முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் - News View

About Us

Add+Banner

Sunday, August 5, 2018

demo-image

முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை மன்னிப்போம் ஆனால் மறக்க மாட்டோம் : முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்

38513904_2210761102475768_7523556236025921536_n
முஸ்லிம்களுடைய அடையாள அரசியல் தோல்வியடைந்து முஸ்லிம்களுடைய தனித்துவமான அரசியல் அடையாளம் என்பது படுகொலை செய்யப்பட்டு விட்டது என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

காத்தான்குடியில் இடம் பெற்ற ஷுஹதாக்கள் தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்துரையாற்றிய அவர். 

முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை மன்னிப்போம் ஆனால் மறக்க மாட்டோம். காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை ஒரு அரசியல் படுகொலையாகும். 1990ம் ஆண்டு நடைபெற்ற அத்தனை படுகொலைகளும் அரசியல் படுகொலைகளாகும் என்பதை பிரகடனப்படுத்துவது முக்கியமானது.

இவைகள் அரசியல் படுகொலைகள் தான் என்பதை முஸ்லிம்கள் உனராத வரை வேறுதுவுமில்லை. முஸ்லிம்களுடைய அடையாள அரசியல் தோல்வியடைந்து விட்டது. முஸ்லிம்களுடைய தனித்துவமான அரசியல் அடையாளம் என்பது படுகொலை செய்யப்பட்டு விட்டது.

2005க்கு முன்பு இருந்த இலங்கையின் அரசியல் நிலைமை என்பது இராஜ தந்திர வழிமுறை என்பது வெளியுலகத்தினுடைய இலங்கை மீதான கரிசனை என்பது இலங்கை மீதான அபிமானம் என்பது இலங்கை மீதான அரசியல் இராஜதந்திர பார்வை என்பது தறபோது மாறுபட்டிருக்கின்றது.

நாம் காத்தான்குடி பள்ளிவாயலில் உயிரிழந்த அந்த முஸ்லிம்களுக்கு செய்கின்ற அரசியல் அஞ்சலி என்பது அரசியலை புரிந்து கொள்வதுதான். என்றுமே நீண்டகாலமாக இலங்கையின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தகின்ற சக்திகளாக இலங்கை அரசாங்கத்தை விட மித மிஞ்சிய சக்திகள் எங்களது களத்தில் நிற்கின்றது.

இந்த சக்திகள் 1990களிலும் நின்றன. 1985ல் இஸ்ரேலின் தாக்கம் இருந்தது. மேற்குலகினுடைய தாக்கம் இருந்தது. இந்தியாவினுடைய தாக்;கம் இருந்தது. இலங்கை மீது இந்தியாவின் கரிசணை வித்தியாசமாக இருந்தது. இன்று அந்த நிலைமைகள் மாற்றமடைந்திருக்கின்றது. இவைகள் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

முஸ்லிம்கள் பார்க்கத்தவறிய கவனிக்காத அக்கறை செலுத்தாத கரிசனையற்ற ஒரு பகுதி இருக்குமாக இருந்தால் இந்த அரசியலில் இராஜ தந்திரமான விடயமாகும். இலவச பூகோல இராஜதந்திர அனுகுமுறை இலங்கையில் பிரயோகிக்கப்படுகின்றது.

இன்று இலங்கையை கையாளுகின்ற நடைமுறைகளில் மாற்றம் வந்துள்ளது. இலவச பூகோல இராஜதந்திர அரசியலை இலங்கையில் புகுத்துகின்ற வழிமுறைகள் இடம் பெற்று வருகின்றது. இந்த இராஜதந்திர அரசியலை முஸ்லிம்கள் அறியவில்லை. முஸ்லிம்களுடைய அடையாள அரசியல் தோற்று விட்டது.

ஆகவே 1990ல் இடம் பெற்ற படுகொலையல்ல படுகொலை இனி வரும் காலங்களிலே நாங்கள் இராஜதந்திர பிரயோகங்களை செய்யாமல் சரியான அரசியல் வழிமுறைகளை கையாளமல் முஸ்லிம் சமூகத்தை காப்பாற்ற முடியாது.

பத்தாயிரம் பேர் மரணித்திருக்கலாம். வீதி யோரங்கள் வயல் வரம்புகளில் கிராமங்களிலும் வயிற்றுக்குள் இருந்த குழந்தையைக் கூட வெளியில் எடுத்து கொலை செய்கின்ற நிலைமைகள் எல்லாம் பெரிய விசயமல்ல இனி நடக்கப் போற விடயங்கள்

நாங்கள் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் படுபாதகமான சூழ் நிலைக்குள் தள்ளப்படுகின்ற நிலைமை இருக்கின்றது. புதிதாக எழுந்திருக்கின்ற 2005க்கு பிற்பட்ட காலத்திலிருந்து வந்திருக்கின்ற புதிய அரசியல் சூழ் நிலைகளை அரசியல் இராஜதந்திர ரீதியாக கையாளப்படல் வேண்டும்.

பல முள்ள சிவில் சமூக அமைப்புக்கள் இருக்க வேண்டும். அரசியலுக்கு கூஜா தூக்குகின்ற சிவில் சமூகம் அச்சப்படுகின்ற சிவில் சமூகம் இவைகளை துடைத்தெறிகின்ற சிவில் சமூகம்; உருவாக்கப்படல் வேண்டும்.

புதிய முயற்சிகள் என்பது மிக அவசியமானது என்ற தீர்மானத்தை எடுக்கின்றவர்களாக நாம் இருக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கின்றேன். பழயதை அனுபவமாக கொள்ள வேண்டும். புதிய பாதை திறந்துள்ளது என்பதை கண் கொண்டு பார்ப்போம்.

அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். அரசியலை அரசியல் ஞானத்தோடு செய்ய வேண்டும். நான் எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதிளையும் தனிப்பட்ட ரீதியாக இப்போது குறை கூறுவது இல்லை. ஏனென்றால் சமூகம் அப்படித்தான் இருக்கின்றது.

நூற்றாண்டு காலமாக பலக்கப்பட்ட அரசியல் களத்தில் கால்பதிக்கின்ற சமூகமாகத்தான் இருக்கின்றது. மாற்றங்களுக்கிடமில்லை.

தமிழர்கள் முஸ்லிம்களுடன் ஒன்றாக இணையாமல் தமிழர்களுக்கு ஒன்றுமில்லை என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு எதுவும் கிடைக்காட்டி எங்களுக்கு ஒன்றும் தேவையில்லை என்று சொல்வது நமது அரசியல் இல்லை என்பதை முஸ்லிம்கள் உணரவில்லை.

சிங்களவர்கள் நம்முடன் சேர்ந்திருக்கின்றார்கள் என்பதை தமிழர்களும் முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *