க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்துச் செய்தி - News View

About Us

About Us

Breaking

Sunday, August 5, 2018

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்துச் செய்தி

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாவணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற்று தத்தமது பிரதேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தாம் பிராத்திப்பதாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

நானை (திங்கள் கிழமை) ஆரம்பமாகும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடுத்துள்ள வாழ்த்து செய்திலயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நாளை நடைபெறும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களது பாடசாலைக்கும் கற்பித்த ஆசிரியருக்கும் தங்களது பெற்றோருக்கும் தமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் உங்களது பரீட்சை முடிவுகள் சிறந்த முறையில் அனைத்து பாடங்களிலும் உயர்சித்திகளைப் பெறவேண்டும் என்று இச் சந்தர்ப்பத்தில் பிராத்திக்கிறேன்.

அத்தோடு கல்வியில் எனது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டம் சிறந்து காணப்படவேண்டும் என்று ஆசைப்படும் அரசியல்வாதி என்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றும் மாணவர்கள் சிறந்த முறையில் சித்தி பெற்று தேசியத்தில் முதலிடம் பெற்று மாவட்டத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு பரீட்சாத்தியின் மனதிலும் ஆசை இருக்க வேண்டும் என்றும் இச்சந்தர்ப்பத்தில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஒவ்வொரு மாணவரிடமும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியில் குறைந்தது வீட்டுக்கொரு பட்டதாரி இருக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாக பரீட்சைக்கு தோற்றும் ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற எல்லாம் வல்ல இறைவனை இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment