யால தேசிய வனத்துக்கு இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக பூட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 30, 2018

யால தேசிய வனத்துக்கு இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக பூட்டு

யால தேசிய வனத்தை நாளை (01) முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார கூறினார். 

அதன்படி யால தேசிய வனத்தின் 01ம் இலக்க வலயமான பலடுவான நுழைவாயில் மூடப்பட உள்ளது. 

மூடப்படும் காலப்பகுதியில் வனத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா ஓய்விடங்கள் என்பன மேம்படுத்தப்படும் என்று சூரிய பண்டார கூறினார். 

இதன் பின்னர் நவம்பர் மாதம் 01ம் திகதி மீண்டு யால தேசிய வனம் திறக்கப்படும் என்று வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார கூறினார்.

No comments:

Post a Comment