அரசியலமைப்பு நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு புதிய கலந்துரையாடல் பத்திரமொன்றை தயாரிக்குமாறு அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கிணங்க, குறித்த நிபுணர்கள் குழுவினால் அண்மையில் நடத்தப்பட்ட, அரசியலமைப்பு நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதத்தின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் உள்ளிட்ட கலந்துரையாடல் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளது.
குறித்த பத்திரத்தை 2 வாரங்களுக்குள் தயாரிக்குமாறு நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசியலமைப்பு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் நீல் இந்தவெல குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பிலான மேலும் பல பகிரங்க விவாதங்களைத் தோற்றுவிக்கும் நோக்கில் கலந்துரையாடல் பத்திரமொன்றை தயாரிக்க பரிந்துரைக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு நடவடிக்கை தொடர்பிலான நிபுணர் குழுவினால் இதற்கு முன்னரும் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment