போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 19ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (31) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் முன்னாள் உதவி கட்டுப்பாட்டாளர் நிஷாந்த அநுருத்தவிடம் சாட்சி விசாரணை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்டதாக குற்றம் சுமத்தி சசி வீரவன்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment