மிஹின் லங்கா, ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை மோசடி - ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

மிஹின் லங்கா, ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை மோசடி - ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை நீடிப்பு

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நிறைவடையவிருந்த காலத்தை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 ஜளவரி மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது. 

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment