காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை ஆகஸ்ட் 3 ஷுஹதாக்கல் தினம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை ஆகஸ்ட் 3 ஷுஹதாக்கல் தினம்

காத்தான்குடியில் 28வது ஷுஹதாக்கல் தினம் எதிர்வரும் 03.08.2018 வெள்ளிக்கிழமையன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

காத்தான்குடியில் 3.8.1990ம் ஆண்டு இரண்டு பள்ளிவாயலகளில் இடம் பெற்ற படுகொலையின் 28வது ஆண்டு நினைவு தினத்தை ஷுஹதாக்கல் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு ஷுஹதாக்கல் தினத்தையொட்டி படுகொலை இடம் பெற்ற பள்ளிவாயல்களான காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாயல்களில் குர்ஆன் ஓதுதல் பிராத்தனை என்பன இடம் பெறவுள்ளது. 
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் அந்தப்பள்ளிவாயல் மஹல்லா பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்கள், மௌலவி ஹாபிழ் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த பட்டங்களைப் பெற்றவர்களும் இதன்போது ளெரவிக்கப்பட்டவுள்ளதாக காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவர் மௌலவி எம்.ஐ.ஆதம்லெவ்வை தெரிவித்தார்.

மேற்படி இரண்டு பள்ளிவாயல்களிலும் 3.8.1990ல் புனித இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது புலிப்பயங்கரவாதிகள் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 103 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment