இலங்கை மாணவர்கள் 18 பேருக்கு ஹிந்தி மொழியை கற்க இந்தியாவில் புலமைபரிசில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

இலங்கை மாணவர்கள் 18 பேருக்கு ஹிந்தி மொழியை கற்க இந்தியாவில் புலமைபரிசில்

இலங்கை மாணவர்கள் 18 பேருக்கு ஹிந்தி மொழியை கற்பதற்கான புலமைபரிசில்களை இந்திய அரசு வழங்கியுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த 18 மாணவர்களுக்கான பயணச் செலவு, கல்விக் கட்டணம் மற்றும் ஒரு வருடத்திற்கான உணவுச் செலவு என்பன இந்த புலமைபரிசிலில் வழங்கப்படுகிறது. 

ஆக்ராவில் அமைந்துள்ள கேந்திரியா ஹிந்தி சன்ஸ்தான் கல்வி நிறுவனத்திலேயே குறித்த மாணவர்கள் தமது ஹிந்தி மொழிக்கான புலமைபரிசிலை தொடரவுள்ளனர். 
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் எச்.ஈ. தரஞ்சித் சிங் சந்து, குறித்த மாணவர்கள் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன்னர் சந்தித்து அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 

குறித்த மாணவர்கள் கண்டி, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment