விவசாய அபிவிருத்தி தொடர்பான தேசிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயத்துறையின் சுபீட்சத்திற்காக முழுமையான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஒத்துழைப்புடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. சட்ட மூலம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இந்த தேசிய கொள்கை சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
காலத்திற்கு ஏற்ற வகையில் விவசாயத்துறைக்கு பொருத்தமானவாறு இந்தக் கொள்கையை தயாரிக்குமாறு விவசாய அமைச்சு பல தடவைகள் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பை கோரியிருந்தது.
இலங்கையின் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், நாட்டின் விவசாயத்துறையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதும் தேசிய கொள்கையின் நோக்கமாகும்.
No comments:
Post a Comment