கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமற் போயுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமற் போயுள்ளனர்

மூன்று மீனவர்களுடன் அறுகம்பையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகொன்று காணாமற் போயுள்ளது.

கடற்றொழில் திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைய தேடுதல் நடவடிக்கைகளுக்கு படகொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் குறித்த படகு காணாமற் போயுள்ளது.

28 வயதான சுமேத லக்மால் சஞ்சீவ, 28 வயதான மதுஷங்க பத்மசிறி மற்றும் 32 வயதான திலும் சத்துரங்க ஆகியோரே காணாமற் போயுள்ளனர்.

No comments:

Post a Comment