இஸ்­ரே­லு­ட­னான கால்­பந்துப் போட்­டியை இரத்துச் செய்­தது ஆர்ஜென்டீனா அணி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

இஸ்­ரே­லு­ட­னான கால்­பந்துப் போட்­டியை இரத்துச் செய்­தது ஆர்ஜென்டீனா அணி

காஸா பகு­தியில் பலஸ்­தீ­னி­யர்­களை இஸ்ரேல் நடத்தும் விதம் காரண­மாக எழுந்த அர­சியல் அழுத்­தங்­களை அடுத்து இஸ்­ரே­லுடன் விளை­யாட இருந்த கால்­பந்து உலக கோப்பை பயிற்சி விளையாட்டு போட்டி ஒன்றை ஆர்­ஜென்­டீனா ரத்துச் செய்துள்ளதாக கூறப்­ப­டு­கி­றது. அர்­ஜென்­டீனா வீரர் கொன்­ஸாலோ ஈஎஸ்­பி­னிடம் செவ்­வாய்க்­கி­ழமை இந்த தக­வலை தெரி­வித்தார்.

உலகக் கோப்பை கால்­பந்துப் போட்­டிகள் இம்­மாதம் ரஷ்­யாவில் தொடங்­க­வுள்­ளன. இதற்கு முன்­ன­ராக இஸ்ரேல் - ஆர்­ஜென்­டீனா இடையே நட்பு ரீதி­யி­லான கால்­பந்து போட்டி சனிக்­கி­ழமை நடைபெற இருந்­தது.

ஆனால், இஸ்ரேல்-, பலஸ்­தீன நாடு­க­ளுக்­கி­டையே நிலவும் பதற்ற சூழ்­நிலை கார­ண­மாக இஸ்­ரே­லுடன் ஆர்­ஜென்­டீனா அணி கால்பந்துப் போட்­டியில் பங்­கேற்கக் கூடாது என்று பலஸ்­தீன தரப்பில் போராட்­டங்கள் நடத்­தப்­பட்­டன. மேலும் ஆர்­ஜென்­டீனா வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டன. இந்த நிலையில் இஸ்ரேல் உட­னான நட்பு ரீதி­யி­லான ஆட்டம் ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக ஆர்­ஜென்­டீனா தெரி­வித்­துள்­ளது. இதனை இஸ்ரேல் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளது.

இது­கு­றித்து இஸ்ரேல் பாது­காப்புத் துறை அமைச்சர் அவிடார் லெபர்மன் தனது ட்விட்டர் பக்­கத்தில், ”ஆர்­ஜென்­டீனா ஜெரூசலத்தில் விளை­யாட இருந்த கால்­பந்துப் போட்­டியை ரத்துச் செய்­துள்­ளது. ஆர்­ஜென்­டீனா வெறுப்­புக்கு சர­ண­டைந்­துள்­ளது. இது அவ­மானம்’’ என்று பதி­விட்­டுள்ளார்.

இதே­வேளை இந்த தீர்­மா­னத்தை மேற்குக் கரையில் உள்ள ரமல்லா மக்கள் உற்­சா­கத்­துடன் கொண்­டாடித் தீர்த்­தனர். பலஸ்­தீ­னிய கால்பந்து சங்கம் ஆர்­ஜென்­டீனா வீரர் மெஸ்­ஸிக்கும் பிற வீரர்களுக்கும் நன்றி தெரி­வித்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.

இந்த இரத்தின் மூல­மாக இஸ்­ரே­லுக்கு எதி­ராக சிவப்பு அட்டை காண்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பலஸ்­தீ­னிய கால்­பந்து சங்­கத்தின் தலைவர் ஜிப்ரீல் ரஜோப் தெரி­வித்­துள்ளார்.

அவாஸ் என்ற அமைப்பு இஸ்­ரே­லுடன் ஆர்­ஜென்­டீனா விளை­யாட கூடாது என்று பிர­சாரம் செய்து வந்­தது. இந்த அமைப்பு ஆர்ஜென்டீனாவின் முடி­வினை 'நெறி சார்ந்த துணிச்­ச­லான முடிவு' என்று வர­வேற்­றுள்­ளது.

கடந்த மார்ச் முதல் காசாவில் இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்­பு­களை எதிர்த்து பலஸ்­தீ­னர்கள் நாள்­தோறும் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு எதி­ராக இஸ்ரேல் அரசு தூப்­பாக்கிச் சூட்டில் ஈடு­பட்டு வரு­கி­றது. இதில் இதுவரை 120க்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் பலி­யா­கி­யுள்­ளனர்.

Vidivelli

No comments:

Post a Comment