100 நாள் திட்டத்தை புத்திஜீவிகளே தயாரித்தனர் - அமைச்சர் ராஜித சேனா­ரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

100 நாள் திட்டத்தை புத்திஜீவிகளே தயாரித்தனர் - அமைச்சர் ராஜித சேனா­ரத்ன

100 நாள் வேலைத்­திட்டம் கொண்ட அர­சாங்கம் ஒன்­றினை அமைப்ப­தற்கு ஜனா­தி­பதி பிர­த­ம­ரி­டமே இறுதித் தீர்­மானம் எடுக்கும் பொறுப்­பினைக் கொடுத்­தி­ருந்தார். இத்­திட்­டத்தில் ஜனாதி­பதி அதிகம் சம்­பந்­தப்­ப­ட­வில்லை. இத்­திட்­டத்தை அரசியலுடன் தொடர்­பு­ப­டாத புத்­தி­ஜீ­வி­களே வகுத்­தார்கள். பிர­தமர் அனை­வ­ருடன் கலந்து பேசி தீர்­மானம் எடுத்தார் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

நேற்று தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதிலளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில், இரு கட்­சி­களும் சேர்ந்து தேசிய அர­சாங்கம் ஒன்றினை அமைப்­பதைத் தவிர எமக்கு மாற்று வழியிருக்கவில்லை.

சோபி­த­தே­ரரின் நினைவு தின நிகழ்வில் ஜனா­தி­ப­தியின் உரையினை­ய­டுத்து கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தேசிய அர­சாங்கம் 2 மாதங்­க­ளுக்கு மேல் நீடிக்­காது என்று தெரி­விப்­பது அவர்­க­ளது கனவாகும். நாங்கள் 2020 வரை எமது பய­ணத்தைத் தொடர்வோம். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் நாமே வெற்றி பெறுவோம். இதற்­காக நாம் ஒன்­றி­ணைய வேண்டும்.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும், சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்­தாலும் நாம் முரண்­பட்­டுக்­கொண்டே தொடர்ந்து பய­ணிப்போம். இரு கட்­சி­களும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் இணைந்து போட்­டி­யிட்டால் பாரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம். இது தொடர்பாக நான் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடினேன். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment