சுதந்திரக் கட்சி நெருக்கடியில் - ஜனாதிபதியின் தலைமையில் தீர்வு திட்டங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

சுதந்திரக் கட்சி நெருக்கடியில் - ஜனாதிபதியின் தலைமையில் தீர்வு திட்டங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஒரு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பம் முதலே இந்நிலை காணப்படுவதாகவும், கட்சியின் புதிய செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள அவர், இன்று (04) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 

அதன்போது கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், 2020 ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இதற்கு பதிலளிக்க வேண்டிய சரியான தருணம் இது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment