திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (29) சமுர்த்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹெரிசன் தலைமையில் சமுர்த்தி வங்கி, மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் திருகோணமலை மாவட்டத்தை பொருத்தமட்டில் 38000க்கும் அதிகமான சமுர்த்தி பெறுவோர் இருக்கின்றனர், மேலும் 19500 சமுர்த்தி கொடுப்பனவுகள் வேண்டியிருக்கின்றது இதில் எதுவிதமான வேறுபாடின்றி வறுமையை எதிர்கொள்பவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் திருகோணமலை மாவட்டத்தை பொருத்தமட்டில் 38000க்கும் அதிகமான சமுர்த்தி பெறுவோர் இருக்கின்றனர், மேலும் 19500 சமுர்த்தி கொடுப்பனவுகள் வேண்டியிருக்கின்றது இதில் எதுவிதமான வேறுபாடின்றி வறுமையை எதிர்கொள்பவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை நிதி நிறுவனங்களிடமிருந்து தவணை முறையில் பணம் செலுத்தி பெற்று கடனாளிகளாக தமது தொழிலை மிகவும் கஷ்டமான நிலையில் செய்துவருவதோடு அவர்களுடைய வாழ்க்கையையும் பல துன்பங்களுக்கு மத்தியில் நடத்தி வருகின்றனர் இவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் நல்ல நிலைக்கு வரும் வரையில் சமுர்த்தி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சரிடத்தில் கேட்டுகொண்டார்.
அத்தோடு மாட்டு வண்டில்களில், சைக்கிள்களில் விறகு தொழில் செய்வோருக்கும், கடல் தொழிலை சுதந்திரமாக செய்ய முடியாதுள்ளதினால் அவர்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்க அமைச்சர் முன்வரவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
இதன் பின்னர் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரிசன் அவர்கள் நல்லாட்சியில் சமுர்த்தி கொடுப்பனவு பெறுபவர்களின் எண்ணிகையை நாடு முழுவதும் அதிகரிக்கவுள்ளதாகவும் அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் வழங்குகையில் இங்கு பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் குறிப்பிட்டதுபோல ஆட்டோ ஓட்டுனர்கள், காட்டு தொழிலார்கள், கடற்தொழிலார்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு இம்மாவட்டத்தில் இருகின்ற சமுர்த்தி வங்கி, மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு அவர்களின் முன்னேற்றதிட்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்றும் கூறினார்.
இந்நிகழ்வில் சேருவலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான டொக்டர் அருண சிறிசேன, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே. தடல்லகே, சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சிறானி வீரகோன், திருமலை மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களும், காவல் துறையினர்கள், அரச அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment