கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவியும் மகளும் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விமுதலை - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவியும் மகளும் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விமுதலை

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகள், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலான வழக்கில் பிடியாணை வழங்கப்பட்ட, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தததை அடுத்து, அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பெண் ஒருவரை தாக்க முற்பட்டமை மற்றும் அவரிடம் ரூபா 25 ஆயிரத்தை கொள்ளையிட முயன்றதாக தெரிவித்து, பெண் ஒருவரால், குறித்த இருவருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, நீதிமன்ற அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகாமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக பிடியாணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கறுவாத்தோட்டம் பொலிசில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, கடந்த வெள்ளிக்கிழமை (01) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment