விபத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் - போக்குவரத்து பொலிஸ் பிரிவு - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

விபத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் - போக்குவரத்து பொலிஸ் பிரிவு

வீதி­களில் ஏற்­படும் வாகன விபத்­துக்­களை குறைத்­து­க் கொள்வதற்கு முறை­யான வீதி ஒழுங்­கு­களை பயன்­ப­டுத்­து­மாறும் வாகன சார­திகள் வாக­னங்­களின் வேகத்­தினை குறைக்­கு­மாறும் போக்­கு­வரத்து பொலிஸ் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் போக்­கு­வ­ரத்து உப பொலிஸ் அத்­தி­ய­ட்­சகர் சஞ்­சீவ சில்வா குறிப்­பி­டு­கையில்,

கடந்த இரு மாதங்­க­ளில காலை மற்றும் மாலை வேளை­களில் மழை­யு­ட­னான கால­நிலை நில­வு­வ­தனால் வீதி விபத்­துக்கள் ஏனைய நாட்­களை விட சற்று அதி­க­மா­கவே பதி­வா­­கின்­ற­ன. வீதி விபத்­துக்­களால் பிர­தான வீதி­களில் வாகன நெரி­சல்­க­ளையும் காண­க்கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

வீதி விபத்­துக்களை மட்­டு­ப்ப­டுத்த வேண்­டு­மானால் வீதி ஒழுங்குகளை முறை­யாக பயன்­ப­டுத்தல் மற்றும் வாக­ன­ங­களின் பிர­யாண வேகத்­தினை மட்­டு­ப்ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். வாகன சார­திகள் வீதி ஒழுங்­கு­களை மீறும் சந்­தர்ப்­பத்தில் அவர்­க­ளுக்­கான உரிய தண்­டனைகள் போக்­கு­வா­ரத்து பொலிஸ் பிரிவால் பெற்­று­த் த­ரப்­படும்.

மேலும், வீதி ஒழுங்­கு­களை அவ­த­னிப்­ப­தற்­கென வழ­மைக்கு மாறான அளவில் போக்­கு­வா­ரத்து பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக வாகன நெரி­சலை வீதி­களில் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் ஏற்­படும் விபத்­துக்­களை குறைத்துக் கொள்­வ­தற்­கா­கவே அவ்­வா­றான நேரங்­களில் போக்குவா­ரத்து பொலிஸார் கட­மை­களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வாகன விபத்­துக்கள் வெவ்­வே­று­சந்­தர்ப்­பங்­களில் நிகழ்­கின்­றன. விபத்­துக்கள் எதிர்­பா­றாமல் நிகழ்­வ­தா­கை­யால்தான் போக்குவரத்து­க­ளுக்கென சில ஒழுங்­குகள் வகுக்­கப்­பட்­டுள்­ளன. பிர­தான பாதை­களில் மிதி­வண்­டிகள் மற்றும் விலங்­கு­களின் நடமாற்றம், பாதை­சா­ரிகள் வீதி ஒழுங்­கு­களை முறை­யாக கடைப்பி­டிக்­காமை, வாகன சார­தி­களின் கவ­ன­யீனம் போன்றன விபத்­துக்கள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைகின்றன.

இவ்­வா­றான விட­யங்­களால் ஏற்­படும் விபத்­துக்கள் மட்டுப்படுத்தப்பட வேண்­டு­மானால் வீதி­களில் பயணிப்­ப­வர்கள் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டுதல் அவ­சி­மாகும். முறை­யான வீதி ஒழுங்­கு­களை கடைப்­பி­டித்தல் அவசியமாக கொள்ளப்படுகின்றது.

Vidivelli

No comments:

Post a Comment