ஜனாதிபதி பிரதமருக்கிடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது - பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கனக ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Friday, June 8, 2018

ஜனாதிபதி பிரதமருக்கிடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது - பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கனக ஹேரத்

மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்­கு­மி­டை­யி­லான பனிப்போர் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்­சியின் அடுத்த தலைவர் என அக்­கட்­சி­யினர் எதிர்­பார்க்கும் அக்­கட்­சியின் பிரதித் தலைவர் ஒரு­வரும் அர்ஜுன் அலோ­சி­ய­சி­ட­மி­ருந்து பணம் பெற்­றுள்­ள­தாக கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்­பினர் கனக ஹேரத் தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்னர் வழங்­கிய வாக்­கு­று­திகள் அனைத்­தையும் மறந்து செயற்­ப­டு­கி­றது. அதற்குப் பக­ர­மாக நாட்டு வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்து ஆட்­சியை நடத்­து­வ­தற்கும் எதிர்­பார்க்­கி­றது. அத­னால்தான் வெளிநா­டு­க­ளுடன் பல்­வேறு உடன்­ப­டிக்­கை­களை அடிக்­கடி மேற்கொண்டு வரு­கி­றது.

எட்கா உடன்­ப­டிக்­கையை கொண்டு வரு­வதற்கு எதிர்­பார்த்­தது. அதற்கு நாடு தழு­விய ரீதியில் எதிர்ப்­பலை கிளம்­பி­யது. அதனால் அதனை கிடப்பில் போட்டுவிட்டு சிங்­கப்­பூ­ருடன் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை செய்­து­கொண்­டுள்­ளது. அதன் மூலம் வெளி­நாட்டு சேவை­யா­ளர்கள் எமது நாட்டை ஆட்­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை பெலி­யத்­த­வி­லி­ருந்து கதிர்­காமம் வரை­யி­லான ரயில் பாதையை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்­வ­தற்­கான வேலைத்திட்டம் ஒன்றும் இடம்­பெற்று வரு­தாக அறியக்கிடைத்துள்ளது. எனவே எதிர்­கா­லத்தில் அந்த ரயில் பாதையூ­டாக பய­ணிப்­ப­தற்கு மேல­திக கட்­டணம் செலுத்த வேண்டிவரும்.

மேலும் அர­சாங்கம் இரா­ணு­வத்­தினர் மீதான பழி­வாங்­கலை மீண்டும் ஆரம்­பித்­துள்­ளது.கடந்த காலங்­களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ரவி­ராஜின் கொலை­யுடன் தொடர்புடைய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கடற்­படை அதிகா­ரிகள் சிலரை கைது­செய்­தி­ருந்­தனர்.எனினும் நீதிமன்றினூடாக அவர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டனர். எனினும் மீண்டும் அவ்­வ­தி­கா­ரி­களை சிறையில் அடைப்­ப­தற்கு சட்­டமா அதிபர் நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறார்

அது தொடர்­பி­லான வழக்கு எதிர்­வரும் 14 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது. இவ்­வா­றான நிலையில் அந்த அதி­கா­ரி­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து எதிர்­வரும் சனிக்­கி­ழமை பி.ப. 2 மணிக்கு ஆர்ப்­பாட்டம் செய்­ய­வுள்ளோம்.

மேலும் மத்­திய வங்கி மோசடி விவ­கா­ரத்­தினால் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தம்மை இனங்­காட்­டிக்­கொள்­வ­தற்கு நாணப்­பட வேண்­டிய விட­ய­மாக மாறி­யுள்­ளது. அத்­துடன் ஜனா­தி­ப­திக்கும் பிதம­ருக்­கு­மி­டையில் இதனால் பனிப்போர் ஆரம்­பித்­துள்­ளது. மத்திய வங்கி பிணை­முறி மோச­டிக்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலைமை தாங்கினார் என்பது முழு நாட்டுக்கும் தெரிந்த விடயம்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ஒருவர், அக்கட்சி எதிர்பார்க்கும் அடுத்த தலைவராகவும் அவர் இருக்கலாம். எனவே அவரும் அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Vidivelli

No comments:

Post a Comment