ரோஹிங்ய அகதிகள் அனைவரையும் மீள ஏற்றுக்கொள்ள மியன்மார் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 6, 2018

ரோஹிங்ய அகதிகள் அனைவரையும் மீள ஏற்றுக்கொள்ள மியன்மார் இணக்கம்

நாட்­டை­விட்டு வெளி­யேறி பங்­க­ளா­தேஷில் தஞ்­ச­ம­டைந்­துள்ள ரோஹிங்ய அக­திகள் மீளத் திரும்­பு­வ­தற்கு முன்­வந்தால் ஏழு இலட்சம் ரோஹிங்ய முஸ்­லிம்­க­ளையும் ஏற்­றுக்­கொள்­வ­தாக மியன்மாரின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் யூ தௌதுன் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்தார்.

சிங்­கப்­பூரில் நடை­பெற்ற பிராந்­திய பாது­காப்பு மாநாட்டின் சங்கரில்-லா கலந்­து­ரை­யா­டலில் ரோஹிங்­யர்கள் பெரும்பான்மையாக வசித்த மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்தில் ஐக்­கிய நாடுகள் சபையின் 'பாது­காப்­ப­தற்­கான பொறுப்பு செயற்றிட்டம்' மேற்­கொள்­ள­படும் பட்­சத்தில் அதன் நிலைமை தொடர்பில் வின­வப்­பட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

'பாது­காப்­ப­தற்­கான பொறுப்பு செயற்­றிட்டம்' 2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உச்­சி­மா­நாட்­டின்­போது அங்கீகரிக்­கப்­பட்­டது. அதில் நாடுகள் தமது சொந்த மக்கள் மீது படுகொ­லைகள், யுத்தக் குற்­றங்கள், இனச் சுத்­தி­க­ரிப்பு மற்றும் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்றச் செயல்­க­ளி­லி­ருந்து பாதுகாப்­ப­தற்கும், இந்த அர்ப்­ப­ணிப்­பினை முன்­கொண்டு செல்வதற்கு ஒவ்­வொரு நாடும் ஏனைய நாடு­க­ளுக்கு ஊக்­கமும் உதவியும் வழங்­கு­வது சுட்டுக் கடமை என்­ப­தையும் ஏற்றுக்கொண்டன.

தன்­னார்வ அடிப்­ப­டையில் 700,000 பேரும் திருப்பி அனுப்பப்படுவார்க­ளாயின் நாம் அவர்­களை ஏற்­றுக்­கொள்ளத் தயாராக இருக்­கின்றோம் என தௌ துன் தெரி­வித்தார். இதனை இனச் சுத்­தி­க­ரிப்பு எனக் கூற முடி­யுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அங்கே யுத்தம் நடை­பெ­ற­வில்லை, எனவே அங்கு யுத்தக் குற்றம் இடம்­பெ­ற­வில்லை. மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்கள், அது தொடர்பில் நாம் கவனம் செலுத்­தலாம், ஆனால் எமக்கு தெளி­வான ஆதா­ரங்கள் தேவை. இந்த ஆபத்­தான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட வேண்டும். மேலோட்­ட­மாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்க முடியாது எனவும் அவர் தெரி­வித்தார்.

பௌத்­தர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட மியன்மாரிலிருந்து இரா­ணுவ நட­வ­டிக்கை கார­ண­மாக கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் 700,000 ரோஹிங்ய முஸ்­லிம்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றனர். இதன்போது பெருமளவில் கொலைகள், பாலியல் வன்புணர்வுகள், தீவைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய உதவி வழங்கும் நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

Vidivelli

No comments:

Post a Comment