கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் சுட்டுக் கொலை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் சுட்டுக் கொலை

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று (08) இரவு காலி, ஊரகஸ்மங்ஹந்திய, கொரகீன பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர், டொனால்ட் சம்பத் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர், கரந்தெனிய, பொரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (SLPP) உறுப்பினரான குறித்த நபர், கெப் ரக வாகனமொன்றில் பயணித்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment