கண்டி வன்முறைகள் : கண்டிமெததும்பர பி சபையின் தலைவரிடம் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

கண்டி வன்முறைகள் : கண்டிமெததும்பர பி சபையின் தலைவரிடம் விசாரணை

கடந்த மார்ச் மாதம் கண்டி தெல்­தெ­னிய பிர­தே­சத்தில் இடம்­பெற்ற வன்செயல் சம்­ப­வங்கள் தொடர்பில் மெத­தும்­பர பிர­தேச சபையின் தலைவர் அசோக சம­ரக்கோன் மற்றும் பிர­தேச சபையின் ஊழியர் ஒருவர் ஆகியோர் பொலிஸ் சி.ஐ.டி. பிரி­வினர் விசா­ரணை நடாத்தி அவர்­க­ளது வாக்கு மூலங்களைப் பதிவு செய்­துள்­ளனர்.

இந்த விசா­ரணை சுமார் நான்கு மணி­நேரம் நடாத்­தப்­பட்­டுள்­ளது. விசாரணையின் பின்பு மெத­தும்­பர பிர­தேச சபையின் தலைவர் அசோக சமரகோன் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்,

மார்ச் மாதம் தெல்­தெ­னிய பகு­தியில் இடம்­பெற்ற வன்­செ­ய­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் தான் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தாக தெல்­தெ­னிய பகுதியைச் சேர்ந்த சிலர் கொழும்பு சி.ஐ.டி. பிரி­வுக்கு மனு­வொன்று சமர்ப்­பித்­துள்­ள­தை­ய­டுத்து ரி.ஐ.டி. பிரி­வுக்கு அழைக்­கப்­பட்டு விசாரிக்கப்பட்டேன் என்றார்.

நான் எந்­த­வொரு வன்­செ­யல்­க­ளு­டனும் தொடர்­பு­ப­டா­மை­யினால் விசா­ர­ணையின் பின்பு விடு­தலை செய்­யப்­பட்டேன். மெத­தும்­பர பிர­தேச சபையின் தலைவர் பத­வியை பெற்­றுக்­கொள்ளும் எதிர்பார்ப்­புடன் இருக்கும் சில அர­சியல்வாதி­களின் சூழ்ச்­சியே இது.

என்­னையும் மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன கட்சியையும் அபகீர்த்திக்குள்ளாக்கும் முயற்சிகளில் சில அரசியல் வாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment