20 வது திருத்தச் சட்டம் நாட்டை படுகுழியில் தள்ளும் - News View

About Us

About Us

Breaking

Monday, June 4, 2018

20 வது திருத்தச் சட்டம் நாட்டை படுகுழியில் தள்ளும்

20 வது திருத்தச் சட்டமானது நாட்டை படுகுழியில் தள்ளும் ஒரு செயற்பாடாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

20 வது திருத்த சட்டத்தை பாராளுமன்றத்தில் ஒரு தனிநபர் மசோதாவாக சமர்ப்பிக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

20 வது திருத்த சட்டத்தின் நோக்கம், நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ரத்து செய்வது அல்ல, ஜனாதிபதி தேர்தலை ஒழிக்க வேண்டும் என்பதே, அதற்கு அரசாங்கம் நிலையற்றதாக இருக்க வேண்டும் மற்றும் நிர்வாகி பலவீனமாக இருக்க வேண்டும், தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

சிலாபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே விமல் வீரவங்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

No comments:

Post a Comment