காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த நான்கு மாதங்களில் 72 குழந்தைகள் பிறந்துள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ். ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் கட்டிடம் சுனாமி அனர்தத்தினால் சேதமடைந்ததன் பின்னர் புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் இந்த வைத்தியசாலையில் பிரசவங்கள் இடம் பெறவில்லை.
இந்த வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணித்தாய்மார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஜாபீர் பொறுப்பேற்றதையடுத்து இந்த வைத்தியசாலையின் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற் கொண்டு வரும் நிலையில் குழந்தை பிரசவங்கள் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற் கொண்டார்.
இப்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் குழந்தை பிரசவத்திற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 1.1.2018 முதலம் 29.4.2018 வரையான காலப்பகுதியில் 72 குழந்தை பிரசவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஜாபீரின் உயர்ந்த சேவைக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
No comments:
Post a Comment