முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் 25வது நினைவஞ்சலி நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரேமதாச சிலைக்கு அருகில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அவர்கள், அமரர் பிரேமதாச அவர்களின் உருவச் சிலைக்கு மலர் செண்டு வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்காக வழங்கப்பட்ட 06 இல்லங்களில் 3 இல்லங்களுக்கும் கொழும்பு மாகாணத்தில் 5,000 குடியிருப்புவாசிகளுக்கு இல்லங்களை வழங்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் முகமாகவும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வீட்டு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் ரணில்
விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஹேமா பிரேமதாச அம்மையார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச மக்களுக்காக அளப்பெரும் சேவையாற்றிய ஒரு தலைவர் வறிய மக்களை இயலுமை உள்ளவர்களாக மாற்றியமைப்பதற்கு அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இதன்போது அவர் பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment