யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிலுள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த தாயும், மகளும் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மகள் உயிரிழந்துள்ளதாகவும் தாயார் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை அம்பன் பகுதியில் இன்று காலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மகள் 58 வயதுடையவர் என்றும் சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment