நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றம் கலையாது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றம் கலையாது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றம் கலையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோல்வியுற்றால் அடுத்து என்ன நடக்கும் என கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுள்ள கட்சித் தலைவரையே அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுப்பார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின்படி அரசாங்கம் பதவிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகும் வரை ஜனாதிபதியால் கூட அரசாங்கத்தைக் கலைக்க முடியாதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment