இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ - நோயாளிகள் உயிர் தப்பினர் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ - நோயாளிகள் உயிர் தப்பினர்

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லின் காசியோமன்பசா பகுதியில் அமைந்துள்ளது பல மாடிகள் கொண்ட மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் நேற்று திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது.

தகவலறிந்து அங்கு தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் விரைவாக மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் தீப்பிடித்து எரிவது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

தீ விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.

No comments:

Post a Comment