நாளை முதல் கொழும்பு கணினி மயமாகிறது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

நாளை முதல் கொழும்பு கணினி மயமாகிறது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மா நகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், மா நகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் யாவும், நாளை முதல் நவீன முறையில் கணினி மயப்படுத்தப்படவுள்ளது.

இதன்பிரகாரம், மா நகர சபையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, நிதிப் பிரிவு ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

மக்களுக்கு அதி விரைவான சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பன இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment