மட்டக்களப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

மட்டக்களப்பில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பை வெட்டுவான் பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவதாகவும் இவரிடம் இருந்து 10 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment