சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்த மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்த மூவர் கைது

பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் விவசாய பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் தோட்டமொன்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்று அதிகாலை 2 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment