காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் எதிர்வரும் 2.4.2018 திங்கட்கிழமை தமது கடமைகளை வைபவ ரீதியாக பொறுப்பேற்கவுள்ளனர். அன்றைய தினம் காலை 10 மணிக்கு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் அவர்களும் காலை 10.15 மணிக்கு பிரதி தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம் அவர்களும் தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளனர்.
இதே நேரம் காத்தான்குடி நகர சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 5.4.2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடை பெறவுள்ளது.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலில் பத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற பத்து உறுப்பினர்களும் எதிர்வரும் 1.4.2018 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment