பெண்களின் தங்கச் சங்கிலிகளை அபகரித்து செல்லும் கொள்ளைக் கோஷ்டியொன்றை எஹலிய கொடை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் காரில் வந்த கோஷ்டியொன்று கொள்ளையிட்டுச் செல்வதாக தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் அவர்களை பின்தொடர்ந்து துரத்திச் சென்று வழிமறித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்த 3 பெறுமதிமிக்க தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள் உட்பட நகை அடகு வைக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்களும் 6 கிராம் ஹெரோயின் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் காலி, ஹொரண ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 25–-30 வயதுடையவர்கள் எனவும் போதைக்கு அடிமையானதால் தமக்குரிய பாரிய செலவுகளை சமாளிக்க பெண்களின் நகைகளை மிகவும் சூட்சுமமாக இவர்கள் கொள்ளையடித்து வந்துள்ளமையும் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment