அம்­பாறை அசம்­பா­விதம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

அம்­பாறை அசம்­பா­விதம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்

அம்­பாறை நகரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்க்­கப்­பட்ட இன­வாத தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்தி சட்டத்தை நிலை­நாட்­டு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­சிலும் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிரதம­ரி­டமும் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளன.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா ஜனா­தி­ப­திக்கும் பிரதமருக்கும் தனித்­த­னி­யாக கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளன. அதே­போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் பிர­த­ம­ருக்கு தனி­யான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளது. 

உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

அம்­பாறையில் முஸ்­லிம்­களின் வணக்­கஸ்­த­ல­மொன்றும் நான்கு கடை­களும் இன­வாத குழு­வொன்­றினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்­ளன. இது நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு இனவாதிகளால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட சேத­மாகும். நிலைமை மேலும் மோச­ம­டையும் முன்பு சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலைநாட்டுவதற்கு உட­னடி நட­வ­டிக்­கை­யினை மேற்கொள்ளுங்கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக சமூக வலைத்தளங்களைப் பயன்­ப­டுத்தி வெறுப்புப் பிர­சா­ரங்கள் முன்னெ­டுக்­கப்­ப­டு­வ­தையும் குண்­டர்­களின் தாக்­கு­தல்கள் அதிகரித்­துள்­ள­தையும் உங்கள் கவ­னத்­திற்குக் கொண்­டு­வர விரும்பு­கிறோம். அம்­பாறை நகரில் நடந்த சம்­பவம் இதன் தொடர்ச்சி­யாகும். -முன்­கூட்­­டியே மிகவும் திட்­ட­மிட்ட அடிப்படையில் இந்த தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.

முஸ்­லிம்­களால் நடத்­தப்­படும் உண­வ­கங்­களில் வழங்­கப்­படும் உண­வு­களில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலப்­ப­தா­கவும் முஸ்லிம்களால் நடாத்­தப்­படும் ஆடை விற்­பனை நிலை­யங்­களில் கருத்­தடை செய்யும் இனிப்புப் பண்­டங்கள் வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் சிங்­கள மக்கள் மத்­தியில் பொய்­யான பிர­சா­ரங்கள் அண்மைக்கால­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்பில் நாம் வைத்­திய நிபு­ணர்­களை தொடர்பு கொண்­ட­போது அவ்­வா­றான கருத்­தடை முறை­களை முன்­னெ­டுக்க முடி­யாது என்பதை உறு­திப்­ப­டுத்­தினர்.

என­வேதான் நாம் இந்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் பொலி­ஸாரும் சுகா­தார அதி­கா­ரி­களும் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு உண்மையை வெளிப்­ப­டுத்த வேண்டும் எனவும் இதற்­கான நடவடிக்கையை முன்­னெ­டுக்­கு­மாறும் வேண்­டு­கோள் விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment