அலோசியஸ், பலிசேனவுக்கு மார்ச் 15 வரை விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

அலோசியஸ், பலிசேனவுக்கு மார்ச் 15 வரை விளக்கமறியல் நீடிப்பு

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேனவுக்கு மார்ச் 15 வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு, இன்று (02) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக் கொண்டபோது நீதவான் அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் மார்ச் 08 அல்லது அதற்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு, கடந்த விசாரணையில், அர்ஜூன் மஹேந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குறித்த உத்தரவுக்கு மேலதிகமாக மற்றுமொரு உத்தரவை வழங்க முடியாது எனவும் நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டதோடு, அன்றைய தினத்தில் சந்தேகநபர் ஆஜராகாவிடின் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தார்.

No comments:

Post a Comment