அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அனைத்து அதிகாரக் கட்சிகளிடமும் சுயேட்சைக் குழுக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சந்தப்பத்தில் சிறுவர்களை பல வழிகளில் அரசியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள செய்வதன் மூலம் அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கம் ஏற்படுமாயின் அது சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகமாகும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் 1929 என்ற தொலைபேசியின் ஊடாக தகவல் தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment