இலங்கை - இந்­தியா - பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் மோதும் முத்தரப்பு சுதந்திரக் கிண்ணம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

இலங்கை - இந்­தியா - பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் மோதும் முத்தரப்பு சுதந்திரக் கிண்ணம்

இலங்கை - இந்­தியா - பங்­க­ளாதேஷ் ஆகிய நாடுகள் மோதும் முத்தரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் செவ்வாய்க்கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு இலங்கை அணி வெற்­றிப்­பா­தையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்­நி­லையில் இலங்­கையில் நடைபெறும் இந்த சுதந்­திரக் கிண்ணத் தொடர் குறித்து ரசி­கர்கள் பெரும் உற்­சா­க­ம­டைந்­துள்­ளனர்.

இலங்­கையின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நடத்தப்படும் சுதந்­திரக் கிண்ண கிரிக்கெட் தொட­ரா­னது எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்­ப­மாகி 18 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இத்தொட­ருக்­கான மூன்று நாடு­களின் அணி வீரர்­களும் அறிவிக்கப்­பட்­டுள்­ளனர். இந்­திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் இத் தொடரில் பங்­கேற்­க­வில்லை.

இந்­நி­லையில் இந்­திய அணியின் விராட் கோஹ்லி, டோனி, பும்ரா, புவ­னேஷ்வர் குமார் ஆகியோரின் ஓய்வால் முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் மதிப்­பி­ழக்­காது என இலங்கை கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது.

இந்­தியா, இலங்கை, பங்­களாதேஷ் அணி­க­ளுக்கிடை­யி­லான முத்தரப்பு இ-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்­கான இந்­திய அணி கடந்த வாரம் அறி­விக்­கப்­பட்­டது. இந்­திய அணியின் முன்­னணி வீரர்கள் தென்­னா­பி­ரிக்க தொடரில் தொடர்ந்து விளை­யா­டி­ய கார­ணத்­தாலும், ஐ.பி.எல். தொடருக்குப்பின் தொடர்ந்து வெளி­நாட்டு தொடர்கள் இருப்பதாலும் அணித் தலைவர் விராட் கோஹ்லி, விக்கெட் காப்பாளர் டோனி, ஹர்திக் பாண்­டியா, வேகப்­பந்து வீச்­சா­ளர்கள் பும்ரா, புவ­னேஷ்வர் குமார், சுழற்­பந்து வீச்­சாளர் குல்தீப் யாதவ் ஆகி­யோ­ருக்கு ஓய்வு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. ரோஹித் ஷர்மா தலை­மையில் இந்­தியா இத் தொடரை சந்­திக்­கி­றது.முன்­னணி வீரர்கள் இல்­லா­ததால் தொட­ருக்கு முக்­கி­ யத்­துவம் இருக்­காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், வீரர்கள் ஓய்வால் முத்­த­ரப்பு இருப­துக்கு 20 தொடர் மதிப்­பி­ழக்­காது என இலங்கை கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது. 

இது­கு­றித்து இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால கூறு­கையில், இலங்கை, இந்­தி­யா­விற்கு எதி­ரா­கத்தான் விளை­யாடிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட எந்த வீரருக்கும் எதிராக நாங்கள் விளையாடவில்லை. எங்கள் அணியிலும் மெத்தியூஸ், அசேல குணரத்னே, லசித் மலிங்க ஆகியோர் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment