ஒலிம்பிக் பதக்கம்பெற்ற இலங்கையின் முதலாவது விளையாட்டு வீரரான டங்கன் வைட் அவர்களின் நூறாவது பிறந்த தினம் மார்ச் முதலாம் திகதி (இன்று) இடம்பெறுவதை முன்னிட்டு விசேட முதல்நாள் தபாலுறை வெளியிடும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதி தபால் அதிபர் (நிர்வாகம்) வி.விவேகானந்தலிங்கம் ஜனாதிபதி அவர்களிடம் இதனை வழங்கி வைத்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜயந்த விஜேரத்ன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினதும் தபால் திணைக்களத்தினதும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment