தபால் வாக்காளர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 1, 2018

தபால் வாக்காளர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை தமது வாக்குகளை அளிக்க முடியாத வாக்காளர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றும் (01) நாளையும் (02) தபால் மூல வாக்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரு கட்டங்களாக கடந்த ஜனவரி 22 மற்றும் ஜனவரி 25, 26 ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக இடம்பெற்ற தபால் வாக்குப்பதிவுக்கு மேலதிகமாகவே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலுவலக நேரங்களில் குறித்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் செயலகத்திலும் அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 5 இலட்சத்து 60,536 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு, தபால் வாக்களிப்பு, ஜனவரி 22 மற்றும் 25 - 26 ஆகிய தினங்களில் இரு கட்டங்களாக இடம்பெற்றது.

இதில் ஜனவரி 22 ஆம் திகதி தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்களிலும், ஏனைய அரச அலுவலகங்கள், திணைக்களங்களில் ஜனவரி 25, 26 ஆம் திகதிகளிலும் இடம்பெற்றது.

No comments:

Post a Comment