கம்பஹா மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள், டெங்கு தொற்று நோய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், இதுவரை 800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதில் ஒருவர் மரணித்துள்ளதாகவும், கம்பஹா மாவட்ட தொற்று நோய்ப்பிரிவின் விசேட வைத்தியர் எஸ். ஆர். ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு, அத்தனகலை, தொம்பே, களனி ஆகிய பிரதேசங்களிலேயே ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தற்போது மழைகாலம் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், டெங்கு தொற்று நோய் மேலும் பரவி, பேராபத்தை விளைவிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் தமது வீடு மற்றும் சுற்றுச் சூழல் என்பவற்றில் அக்கறை கொண்டு, எந்நேரமும் சுத்தமாக வைத்திருப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment