இலங்­கையின் 70 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு நாளை சகல ஏற்பாடுகளும் பூர்த்தி சில வீதிகளும் மூடப்படும் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 3, 2018

இலங்­கையின் 70 ஆவது சுதந்­தி­ர­தின நிகழ்வு நாளை சகல ஏற்பாடுகளும் பூர்த்தி சில வீதிகளும் மூடப்படும்

இலங்­கையின் 70ஆவது சுதந்­திர தின நிகழ்வு நாளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்­பெ­ற­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்ட தலை­வர்­களும் முப்­படை பிர­தா­னி­களும் அர­சியல் பிர­மு­கர்­களும் நிகழ்வில் கலந்­து­கொள்­கின்­றனர். 

பிரித்­தா­னிய அரச குடும்­பத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி இளவரசர் எட்­வேர்ட்டும் அவ­ரது பாரி­யாரும் சுதந்­தி­ர­தின நிகழ்வில் கலந்­து­கொள்­வ­துடன், இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா மற்றும் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள், தூது­வர்கள் உள்­ளிட்ட பிர­மு­கர்கள் கலந்து ­கொள்­கின்­றனர். 

முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க அம்­மையார், மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் முன்னாள் பிர­தமர் தி.மு ஜெய­ரத்ன ஆகியோ­ருக்கும் அழைப்­புகள் விடுக்­கப்­பட்­டுள்­ளன. பாராளுமன்றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் நிகழ்வில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

சுதந்­திர தினத்தை முன்­னிட்டு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள சர்­வ­மத வழி­பாட்டு நிகழ்­வுகள் இன்று ஆரம்­ப­மா­கின்­றன. கொழும்பு சுதந்திர சதுக்­கத்தில் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள முழு இரவு பிரித் நிகழ்வு இன்று இடம் ­பெ­ற­வி­ருக்­கின்­றது. அதேபோல் சுதந்­திர தினத்தன்று ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள இந்து மத வழி­பாட்டு நிகழ்வு கொழும்பு பொன்­னம்­ப­ல­வா­ணேஸ்­வரர் ஆல­யத்தில் இடம்பெறவிருக்­கின்­றது. அத்­துடன் இஸ்­லா­மிய மத நிகழ்­வுகள் கொழும்பு அக்பர் ஜூம்ஆ பள்­ளி­வா­சலில் விசேட தொழுகை இடம்பெ­ற­வி­ருக்­கின்­றன. கிறிஸ்­தவ மத வழி­பாட்டு நிகழ்­வுகள் கொழும்பு டாம் வீதியில் அமைந்­துள்ள மெதடிஸ் தேவா­ல­யத்தில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன. கத்­தோ­லிக்க சமய ஆரா­த­னைகள் கொழும்பு-10, பற்­றிமா தேவா­ல­யத்தில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றது. 

நாளைய தினம் விஷேட போக்­கு­வ­ரத்து, பாது­காப்பு கட்டமைப்புக்களை பொலிஸார் செயற்­ப­டுத்த தீர்­மா­னித்­துள்­ளனர். அதன்­படி சுதந்­திர தினத்­தன்று பொலிஸார் விஷேட பாது­காப்பு மற்றும் போக்கு வரத்து கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். இன்று கொள்­ளு­பிட்டி, கொம்­பனி வீதி பகு­தி­யிலும் விஷேட போக்கு வரத்து திட்­டங்கள் அமு­லாக்­கப்­ப­ட­வுள்­ளன. 
இன்று ஒத்­தி­கைகள் இடம்­பெ­று­வதால் கொள்­ளு­பிட்டி சந்தி, கொம்பனி வீதி சந்தி பகு­தி­களை ஊட­றுத்தோ காலி முகத்­திடல் ஊடா­கவோ காலை 7.00 மணி முதல் நண்­பகல் 12.00 மணி வரை எவரும் பய­ணிக்க வேண்டாம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக இன்று ஒத்­தி­கை­களின் போது, காலி முகத்­திடல், கோல்பேஸ் சுற்றுவட்டம் தொடக்கம் என்.எஸ்.ஏ. சுற்­று­வட்டம் ஊடாக லோட்டஸ் வீதியின் செரமிக் சந்­தி­வ­ரை­யான வீதியும், கொம்­பனி வீதி புகையிரத நிலை­யத்தின் அருகில் இருந்து கோல்பேஸ் சுற்றுவட்டம் வரை­யி­லான மார்க்கன் மார்க்கர் வீதியும் காலை 7.00 மணி முதல் நண்­பகல் 12.00 மணி­வரை மூடப்­பட்­டி­ருக்கும். இத­னை­விட கொள்ளுபிட்டி சந்­தியில் இருந்து கோல்பேஸ் சுற்­று­வட்டம் வரையிலான வீதியின் போக்­கு­வ­ரத்து மட்­டுப்­ப­டுத்­தப்பட்டு, அலுவலகங்கள், பாட­சாலை, அப்­ப­கு­தியில் வசிப்போர் மட்டும் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டுவர்.

இத­னை­விட சுதந்­திர தினத்­தன்று விஷேட போக்­கு­வ­ரத்து திட்டங்கள் அமுல்­ப­டுத்­தப்­படும். அதி­காலை 5.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இந்த போக்­கு­வ­ரத்து திட்டம் அமுலில் இருக்கும். நாளைய தினம் குறித்த காலப்­ப­கு­தியில் காலி வீதியின் கோல்பேஸ் சுற்­று­வட்டம் முதல் ஜனா­தி­பதி செய­லகம் வரை­யி­லான பாதையும் மற்றும் சைத்­திய வீதி ஆகியன் முற்­றாக மூடப்பட்டிருக்கும். 

அத்­துடன் கொள்­ளு­பிட்டி சந்தி முதல் கோல்பேஸ் சுற்­று­வட்டம் வரை­யி­லான வீதி, கொள்­ளுப்­பிட்டி சாந்த மைக்கல் சுற்­று­வட்டம் ஊடாக காலி வீதிக்குள் நுழையும் வீதி, ரொடுன்டா சுற்­று­வட்டம் ஊடாக காலி வீதிக்குள் உள் நுழையும் வீதி, செரமிக் சந்தி ஊடாக ஜனா­தி­பதி செய­லகம் நோக்கி செல்லும் வீதி, சீனோர் சந்தி ஊடாக கோட்டை சி.டி.ஓ. பகு­திக்கு உள் நுழையும் வீதி, கோட்டை சி.டி.ஓ. சந்தி ஊடாக செரமிக் சந்­தியை நோக்கி செல்­வது, கான் சுற்றுவட்டம் ஊடாக கோட்டை பகு­திக்கு , மாகன் மாக்கார் மாவத்தை, உத்­த­ரா­நந்த மாவத்தை சந்தி ஊடாக கோல்பேஸ் சுற்­று­வட்டம் வரை­யி­லான வீதி ஆகி­ய­னவும் மூடப்­படும். 

இதே­வேளை காலி முகத்­தி­டலை ஊட­றுத்து கொழும்­புக்குள் உள்நுழையும் பார ஊர்­திகள் அன்­றைய தினம், வெள்­ள­வத்தை டப்ளியூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக, பழைய ஹெவலொக் வீதி, மாயா சுற்­று­வட்டம் , ஹெவலொக் வீதி, திம்­பி­ரி­கஸ்­யாய வீதி, பேஸ்லைன் வீதி ஊடாக கொழும்­புக்குள் உள்நுழைய முடியும். இதனை­விட ஹெவலொக் வீதி, தும்­முல்லை, சொய்ஸா சுற்றுவட்டம், டீன்ஸ் வீதி ஊடாக மரு­தானை, டெக்­னிகல் சந்தி ஊடா­கவும் கொழும்பை வந்­த­டைய முடியும். 

கொழும்பில் இருந்து வெளி­யேறும் பார ஊர்­தி­களும் அதே வீதியின் ஊடாக வெள்­ள­வத்தை வரை பய­ணிக்க முடியும். இதே நேரம் காலி வீதி­யூ­டாக கொழும்­புக்குள் உள் நுழையும் பஸ் மற்றும் இலகு ரக வாகங்கள், காலி வீதி­யூ­டாக பக­தலே வீதி, ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை, பெளத்­தா­லோக்க மாவத்தை, தும்­மூலை சுற்­று­வட்டம், தேஸ்டன் வீதி, ஜே.ஓ.சி. சந்தி, கிளாஸ் ஹவுஸ் சந்தி, நந்த மோர்ட்டர்ஸ், ஹோர்ட்டன் சுற்­று­வட்டம், சொய்ஸா சுற்­று­வட்டம், டீன்ஸ் வீதி, டெக்­னிகல் சந்தி ஊடாக கொழும்­புக்குள் வரலாம்.
அல்­லது கொள்­ளு­பிட்டி சந்­தியில் வலது பக்கம் திரும்பி தும்­மூலை நோக்கி சென்று அங்­கி­ருந்து நகர மண்­டபம் ஊடக கொழும்பு நோக்கி பய­ணிக்க முடியும். இதே­வேளை கொழும்பில் இருந்து வெளி­யேறும் பஸ், இலகு ரக வாகங்கள், ஒஸ்டின் மாவத்தை, டெக்னிகல் சந்தி, மரு­தானை, டி.பி.ஜாயா மாவத்த, இப்­பன்­வல சந்தி, யூனியன் பிளேஸ், லிபடன் சுற்­று­வட்டம் , தர்­ம­பால மாவத்த, எப்.ஆர். சேன­நா­யக்க மாவத்தை, கண்­னங்­கர மாவத்த, நந்த மோர்ட்டர்ஸ் சந்தி, சுதந்­திர சதுக்க சுற்­று­வட்டம், ரீட் மாவத்தை, தும்­மூலை சுற்றுவட்டம், பெளத்­தா­லோக்க மாவத்தை, ஆர்.ஏ.டி. மெல் மாவத்தை ஊடாக காலி வீதிக்கு சென்ரு மேற்­கொன்டு பய­ணிக்க முடியும். 

பிர­மாண்ட அணி­வ­குப்பு பரி­யா­தையில் இரா­ணுவம் விமா­னப்­படை, கடற்­படை, பொலிஸ், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை, சிவில் பாதுகா­ப்பு படை­யணி தேசிய சிறுவர் படை­யணி ஆகி­ய­வற்றின் 7882 பேர் பங்­கேற்­க­வுள்­ளனர்.

இந்த அணி­வ­குப்பு மரி­யா­தை­யா­னது யாழ். கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் தர்­ஷன ஹெட்டி ஆரச்­சியின் கீழ் இடம்­பெ­ற­வுள்ளது. பிரதி கட்­டளைத் தள­ப­தி­யாக பிரி­கே­டியர் என்.கே.வடுகொட்டபிட்டிய செயற்­ப­ட­வுள்ளார். இதில் இராணுவத்தை சேர்ந்த 4156 பேரும் கடற்­ப­டையைச் சேர்ந்த 910 பேரும் விமா­னப்­ப­டையைச் சேர்ந்த 1125 பேரும் பொலிஸ், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டையைச் சேர்ந்த 927 பேரும் சிவில் பாது­க­பபு படை­ய­ணியைச் சேர்ந்த 664 பேரும் தேசிய மாணவ படை­ய­ணியில் இருந்து 100 பேரும் அணி வகுப்பு மரி­யா­தையில் தனித்­தனி படையணி­க­ளாக பங்­கேற்­க­வுள்­ளனர். அணி­வ­குப்பு மரி­யாதை, சாகச நிக்ழ்­வு­களில் விமா­னப்­படை வச­முள்ள கிபீர் விமாங்கள் உள்ளிட்ட போர் விமா­னங்­களும் ஹெலி­கொப்­டர்­களும் காட்சிப்படுத்­தப்­ப­ட­வுள்­ளன.
இரா­ணு­வத்தின் வச­முள்ள 58 நவீன யுத்த தள­பா­டங்­களும் இதன்போது அணி­வ­குப்பில் இணைக்­கப்­ப­ட­வுள்­ளன. இத­னை­விட கடற்­ப­டையில் பங்­கேற்கும் 910 பேருக்கு மேல­தி­க­மாக, அவர்கள் வசமுள்ள 21 பாரிய, அதிவேக கப்பல், படகுகளும் அணிவகுப்பு மரியாதைக்கு இணைக்கப்படவுள்ளன. அத்துடன் பொலிஸ் படையணியானது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் கட்டளையின் கீழ் செயற்படவுள்ளது. 

அதில் பெண்கள் படையணி வேறாக செயற்படுவதுடன் மோப்ப நாய்கள், குதிரைப் படைப் பிரிவும் உள்ளடங்கவுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அணிவகுப்பை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அயேஷ கருணாதிலக வழி நடத்தவுள்ள நிலையில் அவர்கள் சார்பில் 560 பேர் பங்கேற்கின்றனர். இதில் பெண் படையணியும் உள்ளடங்கும். சிவில் பாதுகாப்பு படையனியின் 664 பேரும் தேசிய மாணவர் படையணியின் 100 பேரும் இதன்போது அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்கவுள்ளனர்.

No comments:

Post a Comment