ராஜாங்கனை குளத்தைச் சுற்றி 17,000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், விவசாயத்திற்கு பயன்படுத்தும் ராஜாங்கனை குளத்தை குடிநீர் தயாரிக்கும் சீனத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் கூறியே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் அவ்வூர் மக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டம் காரணமாக குருநாகல் - அனுராதபுரம் பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக பொலிஸ் அதிகாரிகள் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 ஆர்ப்பாட்டக்காரர்கள் தம்புத்தேகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ப
No comments:
Post a Comment