சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான கால எல்லையை ஜனாதிபதி மேலும் அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, நாளை 8ஆம் திகதி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இயங்குவதற்கு ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கும் வர்த்தமானிப் பத்திரமும் வெளியிடப்பட்டுள்ளது. பிணைமுறி தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த அறிக்கையைத் தயார் செய்யும் பணிகளில் ஜனாதிபதி ஆணைக்குழு ஈடுபட்டு வருகிறது.
No comments:
Post a Comment