கொழும்பில் 2,496 பேருக்கு கொரோனா தொற்று - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

கொழும்பில் 2,496 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை கொழும்பில் 2,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 90 பேர் கொழும்பு மாநகர சபையை சேர்ந்த ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு 1 முதல் 15 வரையான கொழும்பின் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக மாநகர சபை பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கிலிருந்து 800 க்கும் மேற்பட்டோருக்கும், ஜிந்துப்பிட்டி பகுதியில் 500 க்கும் மேற்பட்டோருக்கும், பொரள்ளை பகுதியில் குறைந்தது 400 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் பல்வேறு அத்தியாவசிய சேவை துறைகளுடன் தொடர்புடையவர்கள், சுகாதாரப் பிரிவு மற்றும் குப்பை சேகரிப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment