விக்கியை கைது செய்ய நவ சிங்கள ராவய வலியுறுத்து - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 1, 2020

விக்கியை கைது செய்ய நவ சிங்கள ராவய வலியுறுத்து

புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடரும் அவரின் கருத்தில், அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஓரணியில் திரள வேண்டும்.

அதுமட்டுமல்ல விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்து, வாக்குமூலம் பதிவுசெய்யவேண்டும். நாடாளுமன்றத்துக்குள் மட்டுமல்ல வெளியிலும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகின்றார். புலிகளின் பிரிவினைவாத முகாமையே அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரின் அறிவிப்புகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment